Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பிடிக்கும் என்றால் அங்கேயே போங்கள் - பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் மர்யம் நவாஸ்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (17:56 IST)
இம்ரான் கானுக்கு இந்தியாதான் பிடிக்கும் என்றால் அங்கேயே செல்லுங்கள் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை தீர்மானிக்கும் தேசிய அவையின் (நாடாளுமன்றம்) கூட்டத்தொடர் நீண்ட தாமதத்திற்கு பிறகு இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது.

தொடக்கத்தில் பகல் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு, எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அறையில் கூடி ஆலோசனை நடத்தினர். வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஆளும் பிடிஐ தலைவர் அமீர் டோகர் ஆகியோர் ஆளும் கட்சி சார்பிலும், பிலாவல் பூட்டோ-சர்தாரி, ராணா சனாவுல்லா, அயாஸ் சாதிக், நவீத் கமர் மற்றும் மௌலானா ஆசாத் மஹ்மூத் ஆகியோர் எதிர்கட்சி சார்பிலும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் எதிர்கட்சித் தலைவரின் அறையில் நடைபெற்றது. இதையடுத்து பிற்பகலில் நாடாளுமன்ற அமர்வு கூடியபோது பேசிய பிஎம்எல் நவாஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் கவாஜா சாத் ரஃபீக், இஃப்தாருக்குப் பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்ததாகக் கூறினார்.

இதற்கிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகரின் ஏப்ரல் 3 உத்தரவை ரத்து செய்த தேசிய அவையின் கூட்டத்தை கூட்ட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து ஆளும் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments