Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 3,000 உயிரிழப்புகள் பதிவு

Webdunia
திங்கள், 31 மே 2021 (12:16 IST)
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,000 ஆக பதிவாகியுள்ளது. 

அதே சமயம், நாடு முழுவதும் பரவலாக வைரஸ் பரவலின் எண்ணிக்கை குறைவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சிகிச்சைக்குப் பிறகு 2,38,022 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாகவும் இந்திய  சுகாதாரத்துறை அமைச்சசகம் தெரிவித்துள்ளது.
 
சுகாதார அமைச்சக தரவுகளின்படி இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலின் வேகம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு விகிதம் சரிந்ததாகத் தெரியவில்லை.

இந்திய  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments