Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்த சீனா

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (15:41 IST)
பாலியல் தொழிலுக்கான தண்டனையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது சீனா. 
 
இந்த மாற்றமானது டிசம்பர் 29 முதல் அமலுக்கு வரும். இதுநாள் வரை பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டால், இருதரப்பையும் கட்டாய வேலையில் ஈடுபடுத்தி வந்தது சீனா.
 
அதாவது, இவர்கள் பொம்மைகள், வீட்டு உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். இதனைக் கல்வி மையங்கள் என அழைத்து வந்தது சீனா. இனி இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
 
அதுபோல, கைது செய்யப்பட்டு இதுபோன்ற மையங்களில் இருப்பவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். ஆனால், அதே நேரம் சீனாவில் பாலியல் தொழிலானது சட்ட விரோதமானதுதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட இதுபோன்ற மையங்கள் சிறந்த பலன்களைக் கொடுத்ததாகக் கூறும் சீனா, தற்போதைய கால சூழலில் அவை பொருத்தமற்றதாக ஆகிவிட்டதாகக் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்