Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கேரியா பேருந்தில் திடீர் தீ - குறைந்தது 45 பேர் பலி

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:10 IST)
மேற்கு பல்கேரியாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்குப் பிறகு போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோஃப் பிடீவி தனியார் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
 
நடந்த சம்பவத்தில் ஏழு பேர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
 
திங்கட்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியை காவல்துறையினர் சீல் வைக்கப்பட்டுள்ளனர்.
 
வடக்கு மாசிடோனியாவின் பிரதமர் ஜோரன் சேவ் ஏற்கெனவே பல்கேரிய பிரதமரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் பற்றி விவாதித்ததாக பிடீவி கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments