Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இஸ்லாமியச் சட்டப் படி 20 பேர் கொலை? பெளத்த பிக்கு குற்றச்சாட்டு - விசாரணை ஆரம்பம்

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (18:09 IST)
இலங்கையில் ஷரியா சட்டத்துக்கு (இஸ்லாமிய சட்டம்) அமைவாக 20 பேர் கொல்லப்பட்டனர் என்று, மெதகொட அபயதிஸ்ஸ எனும் பௌத்த பிக்கு வெளியிட்ட தகவல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தேரர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இந்தத் தகவலை தெரிவித்திருந்ததாகவும் அந்த பிக்கு கூறினார்.

வட்டிக்கு பணம் கொடுத்தமை, பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டமை, அரசுக்கு உளவாளியாகச் செயற்பட்டமை, சூது விளையாடியமை உள்ளிட்ட செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட 20 பேர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட்டதாக அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

இந்த விவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கப் போவதில்லை என்றும், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இது குறித்த தகவல்களை வழங்குவதற்கு, தான் தயாராக உள்ளதாகவும், தேரர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து, பதில் போலீஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments