இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர்.
அதற்கு பின் மேல்நிலை கல்வி மையங்களில் பணி செய்தவர். மத்திய குடியுரிமைப் பணி தேர்வாணையத்தின் ஐ.ஏ.எஸ். இறுதிக் கட்ட நேர்காணல்
குழுவில் அங்கத்தினராகப் பணி புரிந்தவர். அவருக்கு மண்வாசனை தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற
கிராமம். அது அவருக்குப் பூர்வீகம். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். ‘ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவது
எப்படி?’ என்ற அவரது கையேட்டைச் சென்னை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.