Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாடம் ஆசனங்கள் செய்வதால் உண்டாகும் பயன்கள்...!!

அன்றாடம் ஆசனங்கள் செய்வதால் உண்டாகும் பயன்கள்...!!
யோகா பயிற்சிக்கு உரிய காலம் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் இயற்கைச் சூழ்நிலை அமைதியுடனும் சூரிய காந்த அலைகள் நிரம்பியதாகவும் இருக்கும். காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களை செய்யவேண்டும். 
காலை கடன்களை முடித்துவிட்டு 10 நிமிடம் கழித்து ஆசனங்களை செய்யத் துவங்கவேண்டும். குளிப்பதற்கு முன்போ அல்லது பின்போ ஆசனங்களை செய்யலாம். ஆனால் கட்டாயம் அரைமணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம். குளிர்ந்த நீரில் குளித்த பிறகு ஆசன பயிற்சி  செய்தால், உடலை வளைப்பதற்கு சுலபமாக இருக்கும்.
 
பயிற்சியை வெறும் தரையில் செய்யக்கூடாது. மேடு பள்ளம் இல்லாத தரையில் போர்வை அல்லது யோகா மேட் விரித்து அதன் மேல் தான்  பயிற்சி செய்யவேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு ஆசனாங்களை செய்யக்கூடாது. உடலின் அசைவுகள் இயல்பாக இருக்க  தளர்வான ஆடைகளை அணிந்து செய்வது நல்லது.
 
ஆசனங்களை வேகமாக அவசரத்துடன் செய்யக்கூடாது. நிதானமாக உடல், மனம் மூச்சி இவை மூன்றும் ஒன்றித்த நிலையில் ஆசனங்களை  செய்ய முயற்சிக்கவேண்டும்.
 
ஆரம்பத்தில் குறைந்த நேரமும், பிறகு அதிக நேரமும் பயிற்சி செய்யலாம். ஒரு ஆசனத்தை செய்த பிறகு அடுத்த ஆசனத்தை செய்வதற்கு 15  அல்லது 20 வினாடி (4 முதல் 5 மூச்சு) ஓய்வு கொள்ள வேண்டும். இவற்றை மனதில் நிறுத்தி ஆசனங்களை செய்தால் மட்டுமே முழு பலன்  கிடைக்கும். அன்றாடம் சில நிமிடங்கள் தவறாமல் யோககலையை பயிற்சி செய்து வந்தாலே போதும் நம் உடல் ஆரோக்கியத்துடன்  வாழலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்பாளி இலை சாற்றினை இந்த முறையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!!