Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்து 20 நிமிடம் கழித்து உயிர்பிழைத்த இளைஞன் – அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம் !

Advertiesment
இறந்து 20 நிமிடம் கழித்து உயிர்பிழைத்த இளைஞன் – அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம் !
, வியாழன், 27 ஜூன் 2019 (15:40 IST)
அமெரிக்கா இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னரும் உயிர் பிழைத்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் மைக்கேல் ட்ரூட் மின்சாரம் தாக்கியதாக மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் உடலில் எந்த அசைவும் இல்லை எனவும் இதயத் துடிப்பு நின்று விட்டதாலும்  இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

அவரது உடலைப் பினக்கூறாய்வுக்காக தயார் செய்த மருத்துவர்கள் அவர் உடலில் அசைவுகள் ஏற்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை அடுத்து மீண்டும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர் உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் உள்ள அனைவரும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உடலில் மின்சாரம் தாக்கியதால் இதயம் மற்றும் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபாநாயகர தூக்கி நோ யூஸ்; வேறு ரூட் பிடிக்கும் திமுக: ஸ்டாலின் புது கணக்கு!