Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டில் இருந்து காதலியை சந்திக்க சென்ற வாலிபர் கைது: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:33 IST)
கொரோனா வார்டில் இருந்து காதலியை சந்திக்க சென்ற வாலிபர் கைது
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்து தப்பித்து காதலியை பார்க்க சென்றதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆஸ்திரேலியா நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்ததை அடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் அவ்வப்போது தனிமைப்படுத்துதல் அறையில் இருந்து ஜன்னல் வழியாக தப்பித்து வெளியே சென்றதாக தெரிகிறது
 
சம்பவத்தன்று அதே போல் அவர் ஜன்னல் வழியாக தப்பித்து தனது காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் அந்த இளைஞரின் காதலியின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்
 
தனது காதலிக்கு பிறந்தநாள் என்றும், அதனால் பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காகவே வந்தேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் நீதிபதிகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இளைஞருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments