Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுரேஷ் ரெய்னா விலகல்….சி எஸ் கே அணிக்கு பலம் கூட்டிய இரு வீரர்கள்!

சுரேஷ் ரெய்னா விலகல்….சி எஸ் கே அணிக்கு பலம் கூட்டிய இரு வீரர்கள்!
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (17:21 IST)
சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டூ பிளஸ்சி மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் துபாய் சென்று அணியோடு இணைய உள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் அணியில் உள்ள தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் என்ற இருவராவர். 

மேலும் சி எஸ் கே அணியின் தூண் என வர்ணிக்கப்பட்ட ஒருவரான சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகி இருப்பது மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த டு பிளஸ்சி மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் துபாய் வந்து சேர்ந்துள்ளனர். தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அணியினரோடு பயிற்சி மேற்கொள்வர் எனத் தெரிகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்!