Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளையாட்டு விபரீதமானது : புலியுடன் சிக்கிய வாலிபர் (வீடியோ)

விளையாட்டு விபரீதமானது : புலியுடன் சிக்கிய வாலிபர் (வீடியோ)
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:27 IST)
புலியுடன் விளையாட்டு காட்டிய வாலிபரை, அந்த புலி தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
சவுதி அரேபியாவில் ஏராளமனோர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். அதுபோல், ஒருவர் புலியை வளர்த்து வருகிறார். அந்தப் புலிக்கு தகுந்த கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் நண்பர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவருக்கு அந்த புலியுடன் விளையாட வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஏற்பட்டது.
 
உடனே புலி அடைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு சென்று அவர் புலியுடன் விளையாடியுள்ளார். இதில் அந்த புலி கோபமடந்தது அவரை தாக்க வந்துள்ளது. அதன்பின்னும் அவர் அந்த புலியிடம் விளையாடுவது போல் போக்கு காட்டியுள்ளார்.
 
இதில் அதிக கோபமடைந்த அந்த புலி, அவரி ஆக்ரோஷமாக தாக்க முயன்றுள்ளது. அவரது காலை வாயால் கடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. ஆனால், இதையெல்லாம் விளையாட்டு என ரசித்துக் கொண்டே, புலியின் உரிமையாளர் வீடியோ எடுத்துள்ளார்.
 
ஆனால், விபரீதத்தை புரிந்து கொண்ட புலியின் பயிற்சியாளர், ஓடி வந்து புலியிடம் இருந்து அந்த வாலிபரை விடுவித்துள்ளார். புலி கடித்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் புதிய முதல்வர் நிதின்பாய் பட்டேல்?