Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலியின் நினைவில் பாம்புடன் குடும்பம் நடத்தும் வாலிபர்

காதலியின் நினைவில் பாம்புடன் குடும்பம் நடத்தும் வாலிபர்

Advertiesment
Cobra
, செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:38 IST)
இறந்து போன தனது காதலி, பாம்பின் உருவில் மீண்டும் வந்து விட்டதாக நம்பும் வாலிபர் ஒருவர், அந்த பாம்புடன் வாழ்க்கை நடத்தும் செய்தி வெளியாகியுள்ளது.


 

 
தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் வசிப்பவர் வாரணன் சரசலின். இவரின் காதலி 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.  அதன் பின், அவர் ஒரு கோப்ரா பாம்புவை பார்த்தார். அந்த பாம்பு, மறைந்து போன தனது காதலியின் தோற்றத்தில் இருப்பதாய் அவருக்குப் பட்டது.


 

 
அவர் கடைபிடிக்கும் புத்த மதத்தின் கூற்றுப்படி, இறந்தவர்கள் விலங்குகளாக மறு பிறவி எடுத்து வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, தனது காதலிதான் பாம்பின் வடிவில் மறுபிறவி எடுத்துள்ளார் என்று நம்பிய அவர், அந்த பாம்பை தன்னுடனே வைத்துக் கொண்டார்.
 
அதோடு தூங்குகிறார், தொலைக்காட்சி பார்க்கிறார், கேரம் போர்டு விளையாடுகிறார், செல்லும் இடம் எங்கும் அதை தனது காரில் அழைத்துச் செல்கிறார்.  அவ்வளவு ஏன்?.. அந்த பாம்புவோடு அவர் பிக்னிக்கும் செல்கிறார். அதோடு பேசிக் கொண்டே, வீட்டில் பொழுதை கழிக்கிறார். 


 

 
இதனால் அந்த பகுதியில் அவர் பிரபலமாகி விட்டார். அது கொடிய விஷமுள்ள கொடூர கோப்ரா பாம்பு. உங்களை கடித்து விடும். அது மிகவும் ஆபத்தானது என பலர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. 
 
உண்மைதான்... மற்றவர்களுக்குத்தான் அது பாம்பு. அவருக்கோ அது மறுபிறவி எடுத்திருக்கும் அவரின் காதலி....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்பவே விரல்ல மை வச்சுட்டா நவ.19 இடைத்தேர்தலில் பிரச்சனை வராதா?