Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை பிரச்சினைக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர்! – விரைவில் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:53 IST)
இந்திய – சீன எல்லை பிரச்சினைக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்ததை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டதால் மேலும் பதட்டம் எழுந்தது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தையால் படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முன்னதாக சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது உள்ளிட்டவற்றால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பிரச்சினைக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜின்பிங் இந்தியா வர உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தியா வந்த ஜின்பிங்கிற்கு மாமல்லபுரத்தில் உபசரிப்பு நடத்தப்பட்டது. தற்போது இரு நாட்டு பிரச்சினைகளால் ஜின்பிங் – மோடி சந்திப்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments