Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை பிரச்சினைக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர்! – விரைவில் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:53 IST)
இந்திய – சீன எல்லை பிரச்சினைக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்ததை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டதால் மேலும் பதட்டம் எழுந்தது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தையால் படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முன்னதாக சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது உள்ளிட்டவற்றால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பிரச்சினைக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜின்பிங் இந்தியா வர உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தியா வந்த ஜின்பிங்கிற்கு மாமல்லபுரத்தில் உபசரிப்பு நடத்தப்பட்டது. தற்போது இரு நாட்டு பிரச்சினைகளால் ஜின்பிங் – மோடி சந்திப்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments