ஆட்சி அமைக்க விரும்பவில்லை: புதுவை எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:32 IST)
புதுவையில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது 
 
சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி திடீரென கவிழ்ந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் திமுக எம்எல்ஏ ஒருவரும் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்தே நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 14 உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என அறிவித்துள்ளன 
இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஒரு பெண் மருத்துவரா? சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ஒரே உடலில் பாதி ஆண், பாதி பெண்.. அபூர்வ சிலந்தியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

டெல்லி குண்டுவெடிப்பு: 3 மணி நேரம் காத்திருந்த சந்தேக நபர்.. பதற்றத்தில் வெடித்ததா கார்?

இந்த பத்தில் ஒரு சின்னத்தை தாருங்கள்: தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு..!

குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்: அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments