Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி அமைக்க விரும்பவில்லை: புதுவை எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:32 IST)
புதுவையில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது 
 
சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி திடீரென கவிழ்ந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் திமுக எம்எல்ஏ ஒருவரும் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்தே நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 14 உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என அறிவித்துள்ளன 
இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments