Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடு; ஆண்டுக்கு 90 லட்சம் உயிரிழப்பு! – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Webdunia
புதன், 18 மே 2022 (12:01 IST)
உலகம் முழுவதும் காற்று மாசுபாடால் ஆண்டுதோறும் 90 லட்சம் மக்கள் இறப்பதாக வெளியாகியுள்ள ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமீப காலங்களில் அதிகரித்துள்ள வாகனங்களின் பயன்பாடு காரணமாக ஏற்படும் புகை, தொழிற்சாலை புகை என நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

காற்று மாசுபாடால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு குறித்த ஆய்வில் உலக அளவில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 55 சதவீதம் உயர்ந்துள்ளது. வங்கதேசம் மற்றும் எத்தியோப்பிய நாடுகளில் காற்று மாசால் ஒரு ஆண்டில் மட்டும் 1,42,883 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் நாடுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. அதே சமயம் புருனே, கத்தார் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை குறைந்த காற்று மாசு இறப்பு விகிதங்களை கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments