Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

நீங்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள கொரோனா அழிஞ்சிடும்! – ஹூ அமைப்பின் விஞ்ஞானி ட்வீட்!

Advertiesment
World
, செவ்வாய், 19 மே 2020 (09:00 IST)
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ள நிலையில், மருந்து கண்டுபிடிப்பதற்கும் கொரோனாவே அழிந்துவிடும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தங்களின் பெரும்பாலான நிதியை செலவிட்டு வருகின்றன. அதன் குறிப்பிட தகுந்த முன்னேற்றமாக சில நாடுகளில் மருந்துகள் பரிசோதனைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. எனினும் முழு மருந்தாக இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியான கரோல் சிகோரா “மனிதர்களுக்கு நாம் எண்ணுவதை விடவும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நம்புகிறேன். அதனால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிபடிப்படியாக வீரியம் குறைந்து தானே அழிந்துவிடும். இதனால் மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கூட கொரோனா அழிந்துவிடும் வாய்ப்புள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீழ்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் கரு.நாகராஜன் – கனிமொழி சாடல்!