Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம்! – உலக நாடுகள் கடும் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:58 IST)
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் பலியான நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியாக சேர வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. அதேபோல ஆப்கானியர்களுக்கு உதவ உலகநாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எஞ்சியிருக்கும் நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு உதவ, பிரிட்டன் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments