Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொம்மைகளின் தலையை வெட்டி எறியும் தாலிபன்கள்: காரணம் என்ன?

பொம்மைகளின் தலையை வெட்டி எறியும் தாலிபன்கள்: காரணம் என்ன?
, வியாழன், 6 ஜனவரி 2022 (17:25 IST)
ஆப்கானிஸ்தானிலில் துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தாலிபான் அமைப்பு ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக அனைத்து துறைகளிலும், செயல்பாடுகளிலும் கடும் கட்டுப்பாடுகளை தாலிபான் விதித்து வருகிறது.
 
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு தாலிபான் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
 
இது குறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, ‘மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
 
அவர்கள் தலையை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு நீட்டிப்பு !