Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரைக் காப்பாற்றிய கொரோனா – ’ரேப்’ செய்ய முயன்றவனிடம் புத்திசாலித்தனமாக தப்பித்த பெண்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (08:10 IST)
கோப்புப் படம்

சீனாவில் 600க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலாக ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பல நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இதனால் உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயர் பீதியைக் கிளப்பி வருகிறது. அப்படிப்பட்ட கொடூரமான வைரஸ் ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

சீனாவின் வூஹான் நகருக்கு அருகில் உள்ள ஜிங்ஷாய் எனும் நகரில் பெண்  ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் கத்த முயல அவரின் கழுத்தை நெறித்துள்ளான்.

அப்போது அவனிடம் இருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக யோசித்த அந்த பெண் இரும ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் இருமிய அவர் தான் வூஹான் மாகாணத்தில் இருந்து வருவதாகவும் தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த இளைஞன் அந்த இடத்தில் இருந்து தப்பித்துள்ளான். அதன் பின் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞனைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்