Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிற பெண்களை சைட் அடித்த கணவரின் கண்ணில் ஊசியை குத்திய மனைவி.. சிறையில் புலம்பல்..!

பிற பெண்களை சைட் அடித்த கணவரின் கண்ணில் ஊசியை குத்திய மனைவி.. சிறையில் புலம்பல்..!
, வியாழன், 30 நவம்பர் 2023 (16:42 IST)
சாலையில் கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் தன்னை மட்டும் பார்க்காமல் பிற பெண்களையும் பார்த்து சைட் அடித்ததால் ஆத்திரமடைந்து ஊசியை எடுத்து கணவரின் கண்ணின் குத்திய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெமினஸ் என்ற 44 வயது பெண்மணி தனது கணவருடன்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கணவர், எதிரே வந்த மற்ற பெண்களை பார்த்து சைட் அடித்ததால் ஆத்திரமடைந்த அவர் ஊசியை எடுத்து கணவரின் கண்ணில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்த கணவர் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்ட நிலையில் போலீசார் வந்து அவரை காப்பாற்றி  மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தலைமறைவாகியிருந்த ஜெமினசை கைது செய்தனர்.

விசாரணையின் போது  தான் தன்னுடைய கணவரின் கண்ணில் ஊசியால் குத்தவில்லை என்றும் அவரே தன்னுடைய கண்ணில் ஊசியால் குத்திக்கொண்டு தன் மீது பழி போடுகிறார் என்று கூறினார்.ஆனால் அந்த பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது அந்த பெண் சிறையில் புலம்பி வருவதாக தெரிகிறது.
 

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்