Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து! – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (08:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிகளை கலந்து போடுவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “பல நாடுகளில் இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் மூன்றாம் அலை பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலையில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் எந்த தரவுகளும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments