Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து! – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (08:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிகளை கலந்து போடுவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “பல நாடுகளில் இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் மூன்றாம் அலை பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலையில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் எந்த தரவுகளும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments