Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து! – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (08:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிகளை கலந்து போடுவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “பல நாடுகளில் இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் மூன்றாம் அலை பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நிலையில் இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது ஆபத்தானது. இது தொடர்பாக நம்மிடம் எந்த தரவுகளும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்: அன்புமணி அறிவிப்பு..!

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவசியம் தான்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments