Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: கேரள அரசு அறிவிப்பு!

இன்று வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: கேரள அரசு அறிவிப்பு!
, புதன், 14 ஜூலை 2021 (07:15 IST)
கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று வெளியாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் இடையேயும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ’கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது என்றும் இந்த முடிவை இணையதளங்களில் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார் 
 
மேலும் இந்த தேர்வை 4.12 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். கேரளாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடி அபராதம்: அதிர்ச்சி தகவல்