ஒமிக்ரானால் புதிய வேரியண்ட் உருவாகும் அபாயம்! – உலக சுகாதார அமைப்பு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (08:21 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிப்பால் புதிய வேரியண்ட் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் வெவ்வேறு வேரியண்ட்களால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் இந்த பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் தற்போது மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து எச்சரித்துள்ள ஐரோப்பிய உலக சுகாதார அமைப்பு “தற்போது பரவி வரும் ஒமிக்ரான், டெல்டாவை விட குறைவான பாதிப்பை ஏற்படுத்தினாலும், வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் ஒமிக்ரான் புதிய வைரஸ் வேரியண்டை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது. அந்த வேரியண்ட் ஒமிக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments