Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடிவுக்கு வர 2 ஆண்டுகள் ஆகும்! – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (09:20 IST)
உலகம் முழுவதும் பரவி உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ் முடிவுக்கு வர இரண்டு ஆண்டு காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிய இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இதுபற்றி கூறிய போது “1918ல் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸை விட இது அதிக அளவில் பரவியுள்ளதாகவும், அதனால் இரண்டு ஆண்டுகளாவது இதன் தீவிரம் நீடிக்கும்” என கூறியுள்ள அவர், உலக மயமாக்கல் கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments