Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா முடிவுக்கு வர 2 ஆண்டுகள் ஆகும்! – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Advertiesment
World
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (09:20 IST)
உலகம் முழுவதும் பரவி உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ் முடிவுக்கு வர இரண்டு ஆண்டு காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிய இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் இதுபற்றி கூறிய போது “1918ல் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸை விட இது அதிக அளவில் பரவியுள்ளதாகவும், அதனால் இரண்டு ஆண்டுகளாவது இதன் தீவிரம் நீடிக்கும்” என கூறியுள்ள அவர், உலக மயமாக்கல் கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணம் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் சுற்றி வந்த ஐ.எஸ். தீவிரவாதி; சுட்டுப் பிடித்த போலீஸ்!