Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலநிலை மாற்றத்துக்கு தடுப்பூசி கிடையாது; பற்றி எரியும் காடுகள்! – உலக சுகாதார அமைப்பு வேதனை!

Advertiesment
World
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:34 IST)
பல நாடுகளில் சில காலமாக அதிகரித்துள்ள காட்டுத்தீயால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

உலகில் காலநிலை மாற்றம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக துருக்கி, க்ரீஸ், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. இதனால் உலகின் வெப்பநிலை அதிகரித்து காலநிலை மாற்றம் துரிதப்படுத்தப்படுவதாக ஐபிசிசி வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “கடந்த சில வாரங்களில், பேரழிவு தரும் காட்டுத்தீ உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இனியும் நாம் வழக்கம்போல நமது வேலையைத் தொடர்ந்தால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் எந்தவொரு நோயைவிடவும் அதிகமாகும். நாம் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவோம், ஆனால் காலநிலை நெருக்கடிக்கு தடுப்பூசி இல்லை” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! – 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!