Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (08:28 IST)
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏமன் தலைநகர் சனாவில், இஸ்ரேல் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியதில், சனா விமான நிலையத்திற்கு வந்திருந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏமன் நாட்டின் சனா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், இதன் மூலம் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல், இஸ்ரேல் மருத்துவமனை அருகே பாலஸ்தீனர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments