Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை தளர்த்தினால் பெரும் ஆபத்து - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (11:43 IST)
கொரோனா பரவல் குறையாத நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 அன்று ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் பல உலக நாடுகளும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ”கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் ஊரடங்கை தளர்த்துவது ஆபத்தை ஏற்படுத்தும். ஊரடங்கை தளர்த்தும் முன்னர் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறைய வேண்டும். போதிய மருந்து பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். முக்கியமாக ஊரடங்கு விலக்கப்பட்டாலும் கூட மக்கள் தொடர்ந்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments