கொரோனா பாதிப்பு குறையும்: இந்தியா குறித்து ஆறுதல் தரும் ஆய்வு!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (11:24 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் என அமெரிக்க ஆய்வு ஒன்று தகவல். 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்நிலையில், நாட்டிற்கே ஆறுதல் தரும் செய்தி ஒன்றை அமெரிக்க ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது, அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் என அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments