Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்கள் சுற்றுபயணமாக இந்தியா வரும் ட்ரம்ப்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (11:40 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் சுற்றுபயணமாக வர இருப்பதால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்று பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருகை தருமாறு ட்ரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் தொலைபேசி வழியாக பேசியுள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 24ல் தனது மனைவி மெலானியாவுடன் இந்தியா வரும் ட்ரம்ப் டெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் டெல்லி மற்றும் குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 2014 இந்திய பயணத்திற்கு பிறகு தற்போது ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments