Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை: கட்டுபடுத்த முடியாத கொரோனா!

ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை: கட்டுபடுத்த முடியாத கொரோனா!
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:51 IST)
சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

சீனாவின் வூகான் நகரிலிரிந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன தேசமே வரலாறு காணாத உயிரிழப்பை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் தங்கள் பிரஜைகளை சீனாவிலிருந்து வெளியேற்றியதுடன், ஹாங்காங் போன்ற தன்னாட்சி நாடுகள் சீனா எல்லையையும் மூடிக்கொண்டுள்ளன. சீன அதிபரும் கொரோனா குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் தலைமறைவாகி விட்டதால் சீன மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

மிக வேகமாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் 1011 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தாலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவில் உள்ள மருத்துவ குழுக்களும் மருத்துவ வசதிகளை செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி: 50 இடங்களுக்கும் மேல் முன்னிலை!