Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் காணாமல் போன குழந்தைகளை தேடும் தண்ணீர் பாட்டில்கள்!!

சீனாவில் காணாமல் போன குழந்தைகளை தேடும் தண்ணீர் பாட்டில்கள்!!
, வியாழன், 17 நவம்பர் 2016 (11:11 IST)
காணாமல் போன குழந்தைகளை கண்டறிய, சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று, குழந்தைகளின் புகைப்படங்களை தண்ணீர் பாட்டில்களில் அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றது.


 
 
சீனாவின் குயிங்டோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 
 
இவர்கள் காணாமல் போன குழந்தைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ”Baobeihuijia.com” இணையதளம் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அவர்களின் புகைப்படம், அடையாளங்கள், குடும்ப விவரங்கள், தொடர்பு எண் ஆகியவற்றுடன் உறை தயாரித்து, அதனை தண்ணீர் பாட்டில்களில் ஒட்டி விடுகின்றனர். 
 
இந்த முயற்சிக்கு "Baby Come Home" என்று பெயரிட்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய தண்ணீர் பாட்டில்களை விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகிய இடங்களில் விற்பனை செய்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்க்கும் அனில் அம்பானியின் ரிலிஜன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ்!!