Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்துச் சிதறும் எரிமலை; உடனடியாக மக்கள் வெளியேற உத்தரவு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (14:01 IST)
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையில் புகை வெளியேற தொடங்கியதால் வெடித்துச் சிதறிம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
இந்தோனேசியா தீவுகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. பாலி தீவில் உள்ள ஆகங் என்ற எரிமலை கடந்த 22ஆம் தேதி வெடிக்க தொடங்கியது. அதிலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. இந்த புகை 2300 அடி உயரத்துக்கு எழுந்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
எனவே ஆகங் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை உடனடியாக அந்த பகுதியில் வெளியேற உத்தரவிட்டனர். அதன்படி ஆயிரக்கணக்கான குடும்பம் தங்களது கால் நடைகளுடன் வெளியேறி உள்ளது.
 
தற்போது 4ஆம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும்போது அதை சுற்றியுள்ள 10 கி.மீ தூரம் வரை அதன் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடிக்கும் போது அதன் சத்தம் 12 கி.மீ தொலைவு வரை கேட்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments