Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்துச் சிதறும் எரிமலை; உடனடியாக மக்கள் வெளியேற உத்தரவு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (14:01 IST)
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையில் புகை வெளியேற தொடங்கியதால் வெடித்துச் சிதறிம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
இந்தோனேசியா தீவுகளில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. பாலி தீவில் உள்ள ஆகங் என்ற எரிமலை கடந்த 22ஆம் தேதி வெடிக்க தொடங்கியது. அதிலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. இந்த புகை 2300 அடி உயரத்துக்கு எழுந்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
எனவே ஆகங் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை உடனடியாக அந்த பகுதியில் வெளியேற உத்தரவிட்டனர். அதன்படி ஆயிரக்கணக்கான குடும்பம் தங்களது கால் நடைகளுடன் வெளியேறி உள்ளது.
 
தற்போது 4ஆம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்துச் சிதறும்போது அதை சுற்றியுள்ள 10 கி.மீ தூரம் வரை அதன் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடிக்கும் போது அதன் சத்தம் 12 கி.மீ தொலைவு வரை கேட்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments