Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களுக்கு இனி ரஷ்ய குடியுரிமை! – புதிய ஆணை பிறப்பித்த புதின்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:32 IST)
உக்ரைனில் உள்ள மக்கள் ரஷ்யாவின் குடியுரிமையை பெறுவதற்கான புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க விளாடிமிர் புதின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களில் உள்ள உக்ரைன் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான ஆணை கடந்த 2019ல் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளில் வாழும் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான புதிய ஆணையில் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments