அதிமுக அலுவலகத்தில் வன்முறை; ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சிறை!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:19 IST)
அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் சென்ற ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தலைமை அலுவலக கதவை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments