Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்மல்லையா அப்பீல்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கலா?

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (06:57 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முயற்சியில் விஜய்மல்லையா உள்ளார்.

இதுகுறித்து விஜய்மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 10ஆம் தேதி என்னை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை அடுத்து தற்போது அப்பீல் செய்யவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்மல்லையா மேல்முறையீடு செய்தால் அவரை இந்தியா அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments