Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் தூக்கி வீசிய கொடூரம்!

6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் தூக்கி வீசிய கொடூரம்!
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (19:38 IST)
மெக்சிகோ நாட்டில் 6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 

 
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால் அரசு அவர்களை கட்டுப்படுத்தவும் திணறி வருகிறது.
 
சில சமயங்களில் இவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் மோதல்களில், பலர் கொத்து கொத்தாக மரணம் அடைகின்றனர். சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் முக்கிய ஆற்றில் பிணங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் மெக்சிகோவின் புறநகர் பகுதி ஒன்றில் 6 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த காவலர்கள் 6 பேரும் கைகள் வெட்டப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் இறந்து கிடப்பதையும் கண்டனர்.
 
webdunia

 
காவலர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் கைகள் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநில பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
இந்த கொலையை செய்த மர்ம கும்பல் எதுவென காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் எலைட் ஆண்டிராட்ஸ் என்ற கும்பல் இதற்கு பொறுப்பேற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'புதிய கட்சி' - லட்சியத்தோடு தொடங்கிய இரும்பு பெண்!