Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு! – காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (15:37 IST)
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளும் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன. அப்படியாக பயன்படுத்தப்படும் நிலையில் அந்த தடுப்பூசிகள் நம்பகமானவை என எப்டிஏ, உலக சுகாதார அமைப்பு போன்றவை பரிந்துரைத்தலும் அவசியமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய அரசு அவசர கால அனுமதி அளித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதை எப்டிஏ நிராகரித்து அனுமதி மறுத்துள்ளது. கோவாக்சின் சோதனை தரவுகள் முழுமையாக இணைக்கப்படாததால் முழுமையாக இணைத்து மீண்டும் விண்ணப்பிக்க எப்டிஏ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments