Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் உயிருக்கு எதாவதுனா உங்கள சும்மா விட மாட்டோம்! – போராளி குழுக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (10:36 IST)
ஈராக் நாட்டின் பிரதமர் மீது ரகசிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈராக் நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் முஸ்தபா அல் கமிதி. பிரதமர் ஆவதற்கு முன்பே உள்துறை தலைவராக இவர் இருந்தபோது அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் பேசி வந்தனர். இந்நிலையில் அவர் தற்போது பிரதமராகியுள்ளதில் அமெரிக்காவின் ரகசிய பங்கு இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிரதமர் முஸ்தபா அல் கமிதியின் வீட்டின் மீது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டு நிரம்பிட ட்ரோன்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பாதுகாப்பு படையினர் காயம்பட்ட நிலையில் பிரதமர் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் இதுபற்றி பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் “ஈராக் அரசின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஈராக்கின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு பொறுப்பேற்றுள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments