Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொலை! இந்த ஆண்டில் மட்டும் 600 சம்பவங்கள்?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (08:52 IST)
அமெரிக்காவில் இந்த ஆண்டில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று விர்ஜீனியாவில் கல்லூரி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பல பகுதிகளில் நடந்து வரும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் வாஷிங்டனுக்கு சுற்றுலா சென்று விட்டு வந்தபோது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பிடிபட்டுள்ள நிலையில் அவர் முன்னாள் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. மேலும் சுடப்பட்ட மாணவர்களும் கால்பந்து அணியில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 600 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகமான சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments