Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

Advertiesment
அமெரிக்கா

Siva

, ஞாயிறு, 22 ஜூன் 2025 (08:26 IST)
ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், "அமெரிக்கா தொடங்கிய போரை முடித்து வைப்போம்" என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருகிறது என்பதும், ஈரானுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.
 
இந்த சூழலில், ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் நேற்று இரவு அமெரிக்க படைகளால் தாக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமைப் பாதைக்கு ஈரான் திரும்பாவிட்டால், மீதமுள்ள ஈரானும் அழிந்துவிடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், "அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்" என ஈரான் பதிலுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
 
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் மத்திய கிழக்கு நாடுகளும் களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், உலக நாடுகள் இடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!