Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும்: அமெரிக்கா

Mahendran
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (10:28 IST)
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் அவ்வப்போது கூறி வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடி பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேசி தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய - பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக நாங்கள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிட வாய்ப்பு இல்லை என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments