Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வேண்டாம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:28 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் ஈரான் தாக்குதலுக்கு மறு தாக்குதல் வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டு தூதரகத்தில் இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஈரான் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா இஸ்ரேல் நாட்டிற்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஏப்ரல் ஒன்றாம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வந்தாலும் ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வேண்டாம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில் ஈரான் மீதான பதில் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்டுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி செய்யும் என்றும் போரை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ரோஹித் சர்மா சதமடித்தும் பத்திரனா பவுலிங்கில் சுருண்ட மும்பை.. சிஎஸ்கே அபார வெற்றி..!

Edited by Siva
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments