Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்ட பைடன்

Advertiesment
அமெரிக்கா
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:10 IST)
அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். 

 
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொரொனாவுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு பூஸ்டராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்த தடை இருந்து வந்தது.
 
இந்நிலையில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இரண்டாவது டோஸுக்கு பிறகு 6 மாதங்கள் கழித்தே பூஸ்டர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்வு!