Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை 3வது முறையாக ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (11:02 IST)
அமெரிக்காவுடன் இந்திய அமைச்சர்கள் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் கடந்த ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது.
 
ஆனால், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதையடுத்து, வரும் ஜூலை 6ம் தேதி இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இருநாட்டு அமைச்சர்களும் பங்குகொள்வார்கள் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த புதிதாக வேறு தேதியை முடிவு செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments