Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
, திங்கள், 28 மே 2018 (08:20 IST)
உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71) 43-வது அதிபராக பதவி வகித்தவர். கடந்த ஜனவரி மாதம் ஜார்ஜ் புஷ்சும் பார்பரா புஷ்சும் தங்களது 73வது திருமண நாளை கொண்டாடினார்கள். 
 
அல்சர் மற்றும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பார்பரா புஷ், ஏப்ரல் 17 ந் தேதி மரணமடைந்ததார். அவரது இறுதி சடங்கு சமீபத்தில் நடைபெற்றது. 
webdunia
இந்நிலையில் புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். சற்று உடல் தேறிய பின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று மீண்டும் புஷ்ஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 
 
இதையடுத்து புஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமரால் தூத்துக்குடி சம்பவத்திற்கு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாதா? ஸ்டாலின் ஆவேசம்