பயணிகளுக்கு ரூ.984 கோடி திருப்பி குடுங்க! – ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (08:09 IST)
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணத்தை திரும்ப அளிக்காத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சமீபத்தில் டாடா குழுமம் வாங்கியது. அதற்கு முன்னதாக ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்தபோது கொரோனா காலத்தில் அமெரிக்காவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுவாக விமானம் ரத்து செய்யப்பட்டால் அதற்கான டிக்கெட் புக்கிங் கட்டணத்தை உடனடியாக பயணிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் ஏர் இந்தியா இந்த விதிமுறையை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க போக்குவரத்து துறை அளித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களை பரிசீலனை செய்ய காலதாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா ரூ.984 கோடியும், கட்டணத்தை திருப்பி அளிக்க தாமதம் செய்ததற்காக ரூ.11.24 கோடியும் செலுத்த வேண்டும் என அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments