Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகளுக்கு ரூ.984 கோடி திருப்பி குடுங்க! – ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (08:09 IST)
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணத்தை திரும்ப அளிக்காத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சமீபத்தில் டாடா குழுமம் வாங்கியது. அதற்கு முன்னதாக ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்தபோது கொரோனா காலத்தில் அமெரிக்காவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பொதுவாக விமானம் ரத்து செய்யப்பட்டால் அதற்கான டிக்கெட் புக்கிங் கட்டணத்தை உடனடியாக பயணிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் ஏர் இந்தியா இந்த விதிமுறையை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க போக்குவரத்து துறை அளித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களை பரிசீலனை செய்ய காலதாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா ரூ.984 கோடியும், கட்டணத்தை திருப்பி அளிக்க தாமதம் செய்ததற்காக ரூ.11.24 கோடியும் செலுத்த வேண்டும் என அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments