Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் கொரோனா விரைவில் முடிவுக்கு வரும்..! – அமெரிக்க மருத்துவ நிபுணர் நம்பிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:40 IST)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் பல்வேறு வேரியண்டுகள் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக பரவியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்த போதிலும் கொரோனாவின் வேரியண்டுகள் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணியிரியல் துறை நிபுணர் குதுப் மஹ்மூத் “இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை. ஒரு வருடத்திற்குள் இந்தியாவிற்குள் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸ். ஏனென்றால் இது அதிக வேரியண்டுகளை கொண்டுள்ளது. ஆனால் கொரோனா விரைவில் முடிவுக்கு வரும். அதன் பரவலை கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments