Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில்..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில்..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
, ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:21 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 8,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்றியின் இதயத்தை பெற்ற நபரின் சர்ச்சைக்குரிய கடந்த காலம்!