Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேல் பலி: இதிலும் அமெரிக்காதான் முதலிடம்!

ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேல் பலி: இதிலும் அமெரிக்காதான் முதலிடம்!
, சனி, 18 ஏப்ரல் 2020 (08:42 IST)
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பலியான நிலையில், இறப்பு எண்ணிக்கை லட்சத்தை தாண்டலாம் என கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வீரியமாக பரவி வரும் நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் சீனாவில் உயிரிழப்புகள் அதிகம் இருந்தாலும், நாளடைவில் அதை சீனா கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் ஸ்பெயின், இத்தாலி நாடுகளில் நிலைமை மோசமாக இருந்தது. தற்போது அனைத்து நாடுகளை விடவும் அமெரிக்கா அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் 4,600 பேர் இறந்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். இதை உரிய காலத்தில் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்கக் கட்டணம்! மோட்டார் வாகன காங்கிரஸ் அதிருப்தி!